×

பிள்ளாநல்லூரில் ரேஷன் கடை திறப்பு

ராசிபுரம், பிப்.16: ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சியில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா கலந்து கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், பேரூராட்சி துணை தலைவர் காவேரியம்மாள், மாவட்ட அணி பொறுப்பாளர்கள் கண்ணன், முகேஷ், பேரூர் இளைஞரணி சுரேஷ், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post பிள்ளாநல்லூரில் ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pillanallur ,Rasipuram ,Union Secretary ,Jehanathan ,Governor ,Subramaniam ,Chairman of the ,Peruradhi Assembly ,Aathiravidar ,Minister ,Welfare Mathivandan ,District Collector ,Dinakaran ,
× RELATED நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை