ஏற்காடு, பிப்.15: ஏற்காடு லாங்கில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி மனைவி அந்தோணியம்மாள் (47). இவர் டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி கூடுதல் விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று அந்தோணியம்மாளை கைது செய்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்தோணியம்மாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
The post மது விற்ற பெண் கைது appeared first on Dinakaran.