சிவகங்கை, பிப். 14: சிவகங்கையில் வாணியங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை நகராட்சியுடன் வாணியங்குடி ஊராட்சியை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் ஊராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு நூறு நாள் வேலை வழங்கப்படாது எனக் கூறி நேற்று மானாமதுரை சாலையில் வாணியங்குடி பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் நகர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் appeared first on Dinakaran.