கோபி, பிப்.14: கோபி அருகே உள்ள இண்டியம்பாளையத்தில் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழந்தார். கோபி அருகே உள்ள தட்டாம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனிச்சாமி (45). இவர் ஆட்டு இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பழனிச்சாமி, மொபட்டில் இண்டியம்பாளையம் சென்று கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக மொபட் நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமிக்கு கனகவள்ளி (34) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
The post மொபட்டில் இருந்து விழுந்த இறைச்சி கடை ஊழியர் பலி appeared first on Dinakaran.