பெரம்பூர்: கொளத்தூர் பூம்புகார் நகர் முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (66). இவர், கூட்டுறவு வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று காலை வீட்டின் கீழ் தளத்திற்கு வெளியே உள்ள பார்க்கிங் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, நாற்காலி போட்டு அதன் மீது ஏறியபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரில் கேட் அவர் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவரது மகன் சதீஷ்குமார், தந்தையை மீட்டு ஆட்டோ மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் குணசேகரை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக ஞானசேகரன் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கிரில் கேட் தலையில் விழுந்து வங்கி மேனேஜர் உயிரிழப்பு appeared first on Dinakaran.