தாம்பரம் போலீஸ் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்
*ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும் என தாம்பரம் போலிசார் அறிவுறுத்தல்
*கிளாம்பாக்கத்தை சுற்றி ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பூத் அமைக்கப்பட உள்ளது.
*காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.
*கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
*வெளி ஆட்டோக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு! appeared first on Dinakaran.