கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, வண்ண விளக்குகள், 56 குண்ட ராஜ யாக சாலைகள் என பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 15 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நிகழ்வு நடைபெறுவதால் பேரூர் பகுதியே விழா கோலம் பூண்டுள்ளது. கோயில் வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம், பாதுகாப்பு முன்னேற்பாடாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் appeared first on Dinakaran.