கலைஞர் வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞரின் நூற்றாண்டினையொட்டி நடத்தப்பட்ட கலைஞர் வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மதுரை,

அரசு நடுநிலைப் பள்ளி 4ம் வகுப்பு பயிலும் மா.ஜாக்ஷிக்காவிக்கு ரொக்கப் பரிசாக ரூ.50,000-இரண்டாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு பயிலும் கு.மதிவதனிக்கு ரொக்கப் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசு பெற்ற சென்னை சைதாப்பேட்டை பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சா.இஜாஸ்அகமதுக்கு ரொக்கப் பரிசாக ரூ.25,000ம் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ், துணைச் செயலாளர்கள் திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன், மதுரை சி.வீரகணேசன், அ.ஜாகிர்உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கலைஞர் வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: