பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு கொன்றனர். வடக்கு வசீரிஸ்தானின் ஹசன் கேல் பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் மறைவிடத்தை திறம்பட குறிவைத்து, 12 தீவிரவாதிகளை சுட்டு கொன்றதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஒரு பாதுகாப்புப் படை வீரரும் கொல்லப்பட்டார்.
The post பாகிஸ்தானில் பயங்கரம் 12 தீவிரவாதிகள் சுட்டு கொலை appeared first on Dinakaran.