சிவகங்கை, பிப்.7: சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேசன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை, காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், செல் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை இம்முகாமில் தெரிவிக்கலாம். இதில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்துகொண்டு ரேசன் விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை ரேசன் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.