கரூர், பிப்.7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவிக சாலையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மனோகரா கார்னர் பேரூந்து நிலையம் பின்புறம் திருவிக சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளதோடு, டாஸ்மாக் கடையும் செயல்படுகிறது. இந்நிலையில், வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் கனரக வாகனங்களும், டாஸ்மாக் நிறுவனங்களுக்கு வரும் இரண்டு சக்கர வாகனங்களும் இந்த சாலையில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இந்த சாலையின் வழியாக அண்ணா நகர், தனியார் மருத்துவமனைகள் உள்ள பகுதிகள், சின்னாண்டாங்கோயில் பகுதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைவரும் சென்று வரும் நிலையில், கனரக வாகன நிறுத்தம் காரணமாக அடிக்கடி இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் வாகன நிறுத்தத்தை கண்காணித்து, அவைகளை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கரூர் மாநகராட்சி திரு.வி.க சாலையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.