பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (41), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் குமார் சவுமியாவிடம் மீண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சவுமியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது appeared first on Dinakaran.