- மல்லசமுத்திரம்
- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- கருமனூர்
- கொட்டபாளையம்
- பாலமேடு
- மல்லூர்
மல்லசமுத்திரம், பிப்.6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு கருமனூர், கோட்டப்பாளையம், பாலமேடு, மல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 200 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், ஈரோடு, அவிநாசி, கோயம்பத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். அதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹7,670 முதல் ₹8,380 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,760 முதல் ₹4,840 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 200 மூட்டை பருத்தி ₹4.50 லட்சத்திற்கு விற்பனையானது. அடுத்த பருத்தி ஏலம் 12ம்தேதி நடைபெறும் என அதிகாரி தெரிவித்தார்.
The post ₹4.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.