×

சேந்தமங்கலம் அருகே வீட்டில் பதுக்கிய 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சேந்தமங்கலம், பிப்.6: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள வண்ணான்குட்டை பகுதியில், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் போலீசார், அப்பகுதியில் உள்ள மனோகரன் (70) என்பவர் வீட்டில் நேற்று திடீர் சோதனையிட்டனர். அவரது வீட்டில் 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர்.

The post சேந்தமங்கலம் அருகே வீட்டில் பதுக்கிய 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Vannankuttai ,Kalapanayakkanpatti ,Inspector ,Govindarasan ,Manoharan ,Dinakaran ,
× RELATED காளப்பநாயக்கன்பட்டியில் மயானத்தில்...