- கிராமம்
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்டம்
- குடியரசு தினம்
- மாவட்டம்
- கலெக்டர்
- சாந்தி
- சென்னை
- ஊரக
- வளர்ச்சி
- பஞ்சாயத்து துறை
- ஆணையாளர்...
தர்மபுரி, ஜன.26: தர்மபுரி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) குடியரசு தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆணையர் அறிவுரையின்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் இன்று (26ம்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. அனைத்து ஊராட்சி செயலாளர்கள், இந்நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-2026ம் ஆண்டுக்கான இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post 251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.