- குற்றப் பிரிவு குற்றவியல் விசாரண
- வெங்கைவால்
- சென்னை
- கே. கனகராஜ்
- ரெங்கசாமி
- வெங்கைவீல் கிராமம்
- வேலனூர் காவல் நிலையம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- காவெரி நகர் பிரைமரி ஹெல்த் செண்ட
- குற்றப் புலனாய்வுத் துறை
- வெங்கைக்வீயல்
- தின மலர்
சென்னை: K.கனகராஜ், 43/2022 S/o. ரெங்கசாமி, வேங்கைவயல் கிராமம் (வெள்ளானூர் காவல் நிலையம்) புதுக்கோட்டை மாவட்டம் என்பவர், கிராம குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், வெள்ளானூர் PS Cr.No.239/2022 U/s 277, 328 IPC 3(1)(b), 3(1)(x), 13(2)(v a) SC/ST (POA) Act 1989 % 26.12.2022 – மதியம் 3 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தின் தீவிரம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.012023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023 -ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.
சாட்சிகளை விசாரித்ததைத் தவிர, சுமார் 196 மொபைல் எண்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது. இது தவிர, கிராம மக்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டது. மலம் கலந்த மாசுபட்ட நீரை குடித்ததால் சிகிச்சை பெற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 0210.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் திருமதி.பத்மா அவர்களின் கணவர் திரு.முத்தையா அவர்கள் கிராமசபைக் கூட்டத்தின் போது, வேங்கைவயல் காவலர் முரளிராஜாவின் தகப்பனார் ஜீவானந்தம் அவர்களை அவமானப்படுத்தியது விசாரணையின் போது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாகிறது.
மேலும், முரளிராஜா, சுதர்ஷன். முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அழிக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டன. இது நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.
புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்த பின்னர், புலன் விசாரணை முடிக்கப்பட்டு (i) முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ.கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989- ன் கீழ் வழக்குகளை விசாரணை செய்யும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், 20.012025 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
The post வேங்கைவயல் சம்பவம் குறித்து குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விளக்கம் appeared first on Dinakaran.