சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தமிழகம் முழுவதும் 88% நிறைவுபெற்றுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். “இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தொகுப்பு வழங்குவதற்காக 50,000 கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
The post பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தமிழ்நாடு முழுவதும் 88% நிறைவுபெற்றுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.