×

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகன் கைது : அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் அதிரடி நடவடிக்கை!!

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகனை அந்நாட்டின் சிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியட்டா பகுதியில் உள்ள அவரது வீட்டில் குற்றப் புலனாய்வு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட, யோஷித ராஜபக்ஷே, இலங்கை முன்னாள் அதிபர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷேவின் இரண்டாவது மகன் ஆவார்.இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியான இவர், கடந்த 2016ம் ஆண்டு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கதிர்காமம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த குற்றப் புலனாய்வு காவல்துறை, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை யோஷித ராஜபக்ஷேவின் இல்லத்திற்கு சென்ற சிஐடி அதிகாரிகள் , அவரை கைது செய்தனர். இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித யோஷித ராஜபக்ஷே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகன் கைது : அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் அதிரடி நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Maginda Rajapakshe ,Colombo ,Sri ,Lanka ,CID ,President ,Mahinda Rajapakshe ,Yoshita Rajapakshe ,Criminal Investigation Police Department ,Pelita region ,Sri Lanka ,
× RELATED இணையவழி குற்றங்களைத் தடுக்க மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்