கரூர், ஜன. 25: கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.ப.கந்தராஜா அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள முல்லை கூட்ட அரங்கில் துவக்கி வைத்தார்.
பயிற்சியில் இணைப்பதிவாளர் அலுவலக பணியாளர் அலுவலர்/துணைப் பதிவாளர் திரு.க.பிச்சைவேலு, கரூர் சரக துணைப் பதிவாளர் திரு.கே,எம்.ஆறுமுகம், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநரும் துணைப் பதிவாளருமான திருமதி.அ.அமுத ராணி, கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி appeared first on Dinakaran.