குடியாத்தம், ஜன.25: குடியாத்தத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன செக்யூரிட்டி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாஹித்(57). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் குடியாத்தம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவனிடம் அப்துல் வாஹித் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அப்துல் வாஹித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சிறுவனுக்கு பாலியல் தொல்லை செக்யூரிட்டி போக்சோவில் கைது appeared first on Dinakaran.