- சேப்பாக்கம்
- T-20 கிரிக்கெட் போட்டி
- சென்னை
- சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ்
- டி-20 கிரிக்கெட்
- தின மலர்
சென்னை, ஜன.25: டி-20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சுற்றியுள்ள பகுதியில் இன்று மதியம் 2 மணி முதல் போட்டி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டுக்கான சர்வதேச ஆடவர் டி-20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மாலை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியை காண அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதனை தொடர்புடைய சாலைகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
விக்டோரியா ஹாஸ்டல் சாலை: விக்ேடாரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை: பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலைியிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
பாரதி சாலை: ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும்.
காமராஜர் சாலை (மெரினா கடற்கரை சாலை): குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும். மேற்கண்ட சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இரவு 10 மணிக்கு பிறகு அனுமதி இல்லை.
வாகன நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்கள்: அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள், கலைவாணர் அரங்கம், ஓமந்தூரர் மருத்துவ கல்லூரி மைதானம், எம்ஆர்டிஎஸ் சேப்பாக்கம் வளாகம், சேப்பாக்கம் பொதுப்பணித்துறை மைதானம், சுவாமி சிவானந்தம் சாலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post டி-20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.