அந்த மனுக்களில், கடந்த 2018ம் ஆண்டு பேருந்துகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போது, டீசல் லிட்டருக்கு 63 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது டீசல் 92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு ரூபாய் 10 காசுகளும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் போக்குவரத்துதுறை
கூடுதல் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் அடங்கிய உயர்மட்டக் குழுவை நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்டக் குழு, அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டு, கட்டணம் நிர்ணயிப்பது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக, அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று, நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்மட்டக் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
The post பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு: தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.