×

ஜோஹோர் சர்வதேச செஸ் தமிழக வீரர் இனியன் சாம்பியன்

ஜோஹோர்: மலேசியாவில் 9வது ஜோஹோர் சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது. மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த போட்டியின் முடிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர் இனியன் பன்னீர்செல்வம் 8.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததுடன் சாம்பியன் பட்டமும் வென்றார். இவர் 8 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் டிராவும் செய்தார். மற்றொரு இந்திய வீரர் வி.எஸ்.ராகுல் 7 புள்ளிகளுடன் 2வது இடத்தை கைப்பற்றினார்.

The post ஜோஹோர் சர்வதேச செஸ் தமிழக வீரர் இனியன் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Johor International Chess Tamil ,Johor ,9th ,Johor International Open Chess Tournament ,Malaysia ,Inian Panirselvam ,Johor International Chess Tamil Player Ionian ,Dinakaran ,
× RELATED இடைப்பாடியில் தனியார் பள்ளி வேனில்...