இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4 பகுதியில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. அந்த நேரத்தில், விமான நிலையத்திற்குள் நாச வேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து விட்டதாகவும், அவனை அதிரடிப்படை தேசிய பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்டோர் சுற்றி வளைத்து பிடிப்பது போல் ஒத்திகை நடத்தினர்.
அதோடு சென்னை விமான நிலையத்தில் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த 7 அடுக்கு பாதுகாப்பு முறை வரும் 26ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பின்பு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.