கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், சீமான் மீது பிரபாகரனின் அண்ணன் மகன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த பெண் செய்தியாளரிடம் முகம்சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருக்கிறார். செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் ( அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சீமான் பொது இடங்களிலும், ஊடக சந்திப்புகளிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
The post பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் சீமானுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் appeared first on Dinakaran.