×

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு: நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு

கள்ளக்குறிச்சி, ஜன. 24:கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த விவாகரம் தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) பிளஸ்2 படித்து வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இந்நிலையில் தனியார் பள்ளி மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் உயிரிழந்த மாணவி மதியின் தாயார் செல்வி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் வழக்கிற்காக பள்ளி நிர்வாகத்தினர் மீது போடப்பட்ட வழக்கு எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ உரையாடல் பதிவுகள், மரண வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரை வழக்கில் சேர்க்க வேண்டும் ஆகியவற்றை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அதற்கான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி மதி தாய் செல்வி மற்றும் இவரது வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார்.

The post கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு: நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Judge ,Sriram ,Ram ,Mathi ,Ramalingam ,Periyanesalur, ,Cuddalore district ,Kaniyamoor Private School ,Chinnasalem ,Dinakaran ,
× RELATED தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி...