×

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கருப்பு பட்டையுடன் போராட்டம்

விருதுநகர், ஜன.24: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.

The post சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கருப்பு பட்டையுடன் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : CBS abolition movement ,Virudhunagar ,CBS ,abolition ,Collectorate ,Virudhunagar Collectorate ,
× RELATED பழைய பென்ஷன் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்