×

அரசு பஸ் மீது கார் மோதி 10 பேர் படுகாயம் வேலூர் அருகே

வேலூர், ஜன.24: வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சஞ்சய்(19). இவர் நேற்று பிற்பகல் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் சென்றார். சாத்துமதுரை அடுத்த நெல்வாய் அருகே சென்றபோது, முன்னால் சென்ற காலை முந்தி செல்ல முயன்ற சஞ்சய், எதிர் திசையில் வேலூர் நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் காரில் பயணம் செய்த சஞ்சய், பஸ்சில் பயணம் செய்தவர்கள் தண்டபாணி, ஆபர்வா, யமுனா, விஜியா, கற்பகம், துரைசாமி, லீலா, நித்யா, லோகநாயகி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் மீது கார் மோதி 10 பேர் படுகாயம் வேலூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Vellore ,Sanjay ,Sathuvachari, Vellore ,Tiruvannamalai ,Sathumadurai ,Nelvai… ,
× RELATED வேலூர் மேல்மொணவூர் பகுதியில்...