கிருஷ்ணகிரி, ஜன.24: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பையனூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியை கேர்ந்த காளிதாஸ் (25) என்பவருடன், தங்களது மகளுக்கு பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஆசை வார்த்தை கூறி, அவர் கடத்தி சென்றிருக்க கூடும் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.