பரமத்திவேலூர், ஜன.23: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள அண்ணா நகரில் இருந்து, மீனாட்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள டீ கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், டீ கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிமையாளர் தனசேகரன் (39) என்பவரை கைது செய்து, 5 கிலோ கொண்ட 361 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post டீ கடையில் 5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் appeared first on Dinakaran.