×

தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

பள்ளிபாளையம், ஜன.23: பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் இங்குள்ள பொன்னி சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு, மனைவி குழந்தைகளுடன் குலதெய்வ கோயிலுக்கு சென்றார். பிற்பகல் 3 மணியளவில், கண்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்க்கையில், பீரோவின் லாக்கரை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நகையை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

The post தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kannan ,Odapalli ,Ponni Sugar Mill ,Kula Deiva temple ,
× RELATED வீடுகள்தோறும் தரம் பிரித்து வாங்கப்படும் குப்பைகள்