சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.