திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது இல்லை. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்ற கூடாது. இதனை அதிகாரிகள் சரியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதில், மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, மாநகர நல அலுவலர் கலைச்செல்வன், உதவி ஆணையாளர் வினோத், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மனித கழிவுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.