குட்டை நீரில் மூழ்கி முதியவர் பலி

 

பண்ருட்டி, ஜன. 22: குட்டை நீரில் தவறி விழுந்து முதியவர் பலியானார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் இவரது மகன் கோபிநாதன் அவரை தேடி சென்றார்.

அப்போது பட்டுசாமி நிலத்தில் அருகே உள்ள குட்டையில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குட்டை நீரில் மூழ்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: