கோவை, ஜன.22: கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம், நகல் அட்டை, தொலைபேசி எண் மாற்றம், போட்டோ மாற்றம் தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். கடந்த சில வாரங்களாக ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
The post ரேஷன் கார்டு பெயர் சேர்க்க முகாம் appeared first on Dinakaran.