நிலம் ஆக்கிரமிப்பதாக மக்கள் புகார்: ரியல் எஸ்டேட் தரகரை அடித்த பாஜ எம்பி


திருமலை: தெலங்கானா மாநில பாஜக எம்.பி. ஈட்டல் ராஜேந்தர் அந்த மாநிலத்தில் உள்ள மேட்சல் மாவட்டம் போச்சாரம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கிராம பொதுமக்கள் அங்கிருந்த ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை காண்பித்து இவர் எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் என புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் வேதனையை பார்த்து ஆவேசமடைந்த எம்.பி. ஈட்டல் ராஜேந்தர் பொதுவெளியில் அந்த ரியல் எஸ்டேட் தரகரின் கன்னத்தில் ஓங்கி அடித்தார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான பாஜ தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் அந்த ரியல் எஸ்டேட் தரகரை இழுத்துப் போட்டு அடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post நிலம் ஆக்கிரமிப்பதாக மக்கள் புகார்: ரியல் எஸ்டேட் தரகரை அடித்த பாஜ எம்பி appeared first on Dinakaran.

Related Stories: