×

வயதானவர்கள் செல்ல சபரிமலையில் ரோப் கார் பணிகள் விரைவில் துவக்கம்


திருவனந்தபுரம்: சபரிமலையில் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு அரசுத்துறையினருக்கு நேற்று திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் எவ்வித குறைகளும் இல்லாமல் , பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்து திரும்பியுள்ளனர். இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 305 ஆகும். கடந்த வருடம் 46 லட்சத்து 77 ஆயிரத்து 598 பேர் தரிசனம் செய்தனர். அந்த வருடத்தில் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 180 ஆகும்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 308 பேர் கூடுதலாக வந்துள்ளனர். இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் கிடைத்த மொத்த வருமானம் ரூ440 கோடியாகும். கடந்த வருடம் ரூ360 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரூ80 கோடிக்கு மேல் அதிக வருமானம் கிடைத்துள்ளது. சபரிமலையில் ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வது தான் ரோப் காரின் முக்கிய நோக்கம் என்றாலும், வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் இதில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதன் தூரம் 2.7 கிமீ ஆகும். ஒன்றரை வருடத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோப் கார் செயல்பாட்டுக்கு வந்தால் டிராக்டர்களில் சரக்குகள் கொண்டு செல்வது மற்றும் டோலியில் ஆட்களை கொண்டு செல்வது நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வயதானவர்கள் செல்ல சபரிமலையில் ரோப் கார் பணிகள் விரைவில் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Kerala Devaswom ,Board ,Minister ,Vasavan ,Mandala ,Makaravilakku ,
× RELATED சபரிமலை கோயில் அருகே பூந்தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கின