×

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டி..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளித்த 8 பேர் தங்கள் மனுவை திரும்ப பெற்றனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கனவே ஏற்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியலுடன் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. ஒரே சின்னத்தை சுயேச்சைகள் இருவர் கேட்கும்பட்சத்தில் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

The post ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Erode East Assembly ,Erode ,DMK ,V.C. Chandrakumar ,NDA ,Seethalakshmi ,
× RELATED ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி...