கரூர்: கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் இளவரசன்(41). இவர் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து நேற்று குழந்தைகள் நல பாதுகாப்பு நல அலுவலரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் கரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளவரசனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரர் அதிரடி கைது appeared first on Dinakaran.