×

கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

அண்ணாநகர், ஜன.18: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருகை குறைந்ததாலும் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நாளை முகூர்த்த நாள் என்பதாலும், சொந்த ஊர்களுக்கு சென்ற சில்லறை வியாபாரிகளில் பலர் சென்னை திரும்பியதாலும் நேற்று காலை கோயம்பேடு பூமார்க்கெட்டிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ₹1,200ல் இருந்து ₹2,000க்கும், ஐஸ் மல்லி ₹900ல் இருந்து ₹1,700க்கும், முல்லை ₹900க்கும், ஜாதி மல்லி ₹500ல் இருந்து ₹700க்கும், கனகாம்பரம் ₹800ல் இருந்து ₹900க்கும், அரளி பூ ₹150ல் இருந்து ₹200க்கும், சாமந்தி பூ ₹120க்கும், சம்பங்கி ₹100ல் இருந்து ₹120க்கும், பன்னீர் ரோஸ் ₹60ல் இருந்து 100க்கும், சாக்லேட் ரோஸ் ₹120ல் இருந்து ₹150க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbaté ,Annanagar ,Andhra ,Tamil Nadu ,Coimbed Market ,Pongal festival ,Chennai ,Coimpet ,
× RELATED கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று...