×

வங்கதேசத்தில் உல்பா தலைவரின் ஆயுள் தண்டனை 14 ஆண்டாக குறைப்பு

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு 10 லாரிகளில் 27000 கையெறி குண்டுகள், 150 ராக்கெட் லாஞ்சர் உட்பட ஏராளமான ஆயுதங்கள் ஏற்றிச்செல்லப்பட்டது. போலீசாரின் சோதனையின்போது இவை அனைத்தும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள உல்பா அமைப்பின் தலைவர் பரேஷ் பருவா உள்ளிட்டோருக்கு கடந்த 2014ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனை கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுள்தண்டனையை 14 ஆண்டுகளாக குறைத்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வங்கதேசத்தில் உல்பா தலைவரின் ஆயுள் தண்டனை 14 ஆண்டாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,ULFA ,Dhaka ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக்...