×

காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய உடைகளை அணிந்து வந்த காவலர்கள்

 

திருத்துறைப்பூண்டி, ஜன. 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பாஸ்கரன் துவங்கி வைத்தார். மண்பானை வைத்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பொங்கல் வைத்தனர். காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழா கொண்டாடினர். காவலர்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓட்டப்பந்தயம் கனியும் கரண்டியும் மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி காவலர்களுக்கான இசை, லக்கி கார்னர் உறியடி, கோலப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, மோகன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகாராணி எஸ்ஐக்கள் யுவராஜ், ராஜா காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய உடைகளை அணிந்து வந்த காவலர்கள் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Thiruthuraipoondi ,Samathuva Pongal festival ,Thiruthuraipoondi police station ,Tiruvarur district ,DSP ,Bhaskaran ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை...