×

குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட 17 கைதிகளுக்கு பரோல் வேலூர் மத்திய சிறையில் இருந்து

வேலூர், ஜன.14: பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாட பரோலுக்கு விண்ணப்பித்திருந்த 35 சிறைவாசிகளில் நேற்று மதியம் வரை 17 பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பங்களை அளிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு சிறை நிர்வாகம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குகிறது. இந்த நிலையில் வரும் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வேலூர் மத்திய சிறையில் 35க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயர்அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் நேற்று மதியம் வரை 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோல் வழங்கப்பட்ட அவர்கள் பொங்கல் திருநாளை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை சிறைக்கு திரும்ப வேண்டும் என்று சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட 17 கைதிகளுக்கு பரோல் வேலூர் மத்திய சிறையில் இருந்து appeared first on Dinakaran.

Tags : Vellore ,Central ,Prison ,Pongal festival ,Pongal Day ,Pongal ,Diwali ,Central Prison ,
× RELATED அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்..!!