- சமத்துவம் பொங்கல்
- நாரவாரிக்குப்பம்
- செங்குன்றம் நாராவாரி குப்பம் ஊராட்சி
- பஞ்சாயத்து
- தமிழரசி குமார்
- துணை தலைவர்
- நாராயணன்
- நிர்வாக நிர்வாக அதிகாரி
- யமுனா
- நாராவரியில் சமத்துவப் பொங்கல்
- குப்பம்
புழல், ஜன. 14: செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், நிர்வாக செயல் அலுவலர் யமுனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்புத் தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கலிட்டு பேரூராட்சி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் சர்க்கரைப் பொங்கலை பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார் வழங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post நாரவாரிகுப்பத்தில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.