- பொங்கல்
- அவாடி கார்ப்பரேஷன்
- அமைச்சர்
- ச. நாசர்
- ஆவடி
- மாநகராட்சி
- திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க
- ஆணையாளர்
- கந்தசாமி…
- தின மலர்
ஆவடி, ஜன. 14: ஆவடி மாநகராட்சி வளாகத்தில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார். திருவள்ளுர் மத்திய மாவட்ட திமுக சார்பில், நேற்று ஆவடி மாநகராட்சி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மக்களுடன் சேர்ந்து பொங்கல் பொங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
பின்னர் மாநகராட்சி ஊழியர்களின் ரங்கோலி, சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, கயிறு இழுத்தல், உரி அடித்தல், மியூசிக்கல் சேர் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் கந்தசாமி, துணை மேயர் சூரியகுமார், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post ஆவடி மாநகராட்சி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு appeared first on Dinakaran.