சென்னை, ஜன.14: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியும், 17ம் தேதி சனிக்கிழமை அட்டவணைப்படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஞாயிறு விடுமுறை நேர அட்டவணை: காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சனிக்கிழமை அட்டவணை: காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
The post பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயங்கும் appeared first on Dinakaran.