×

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா

கடலூர், ஜன. 14: கடலூர் மாநகராட்சி வன்னியர்பாளையத்தில் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. கடலூர் கல்வி கழக மேலாண்மை அறங்காவலர் மூத்த வழக்கறிஞர் அருணாசலம் தலைமை தாங்கினார். எல்டர்ஸ் பார் எல்டர்ஸ் பவுண்டேஷன் இயக்குனர் இளங்கோ, ராஜரத்தினம் வரவேற்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக விஸ்கொயர் மால் நிறுவனர் டாக்டர் அனிதா ரமேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ரோட்டரி கிளப் ஆப் ரோட்டரி சங்கமம் தலைவர் நாராயணசாமி, ரவிச்சந்திரன், கனி, ராகுல், ரவிச்சந்திரன், ஹரிதாஸ், சண்முகராஜ், வில்மணி, ரவிராஜ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். எல்டர்ஸ் பார் எல்டர்ஸ் பவுண்டேஷன் கணக்காளர் ராஜலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முதியோர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

The post முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Elderly Home ,Cuddalore ,Pongal ,Vanniyarpalayam, Cuddalore Municipality ,Cuddalore Education Association ,Senior Advocate ,Arunachalam ,Elders Bar Elders Foundation ,Ilango ,Rajaratnam ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை...