போலீசார் விசாரணையில், அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பது தெரியவந்தது. இவர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். வேலை இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் போதையில் படுத்துள்ளார். அப்போதுதான் திடீரென நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார், சதீஷ்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் சீண்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.