×

பொங்கல் பண்டிகை: யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியீடு

டெல்லி: ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.பொங்கல், மகர சங்கராந்தி பண்டிகை காரணமாக தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. யூஜிசி நெட் தேர்வை ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் நடத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

The post பொங்கல் பண்டிகை: யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,National Selection Agency ,UGC ,Delhi ,Pongal ,Makara Sankranti festival ,UGC NET ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை