×

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

 

தூத்துக்குடி, ஜன.12: தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ராமர் மகன் குமாரவேல் (32). மீனவரான இவர் கடந்த 6ஆம் தேதி சக மீனவர்கள் 6 பேருடன் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர் தூத்துக்குடியில் இருந்து சுமார் 47 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தேடி வருகின்றனர்.

The post கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Kumaravel ,Ramar ,Thuthukudi Thespurat ,Tuticorin ,
× RELATED ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோவை...